Monday, 17 December 2012

உலகம் அழியுமா..? பித்தலாட்டங்கள்…


உலகம் மாபெரும் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கிறதென்பதே மகத்தான உண்மை..

2012 ல் உலகம் அழியும் என்று அமெரிக்கத் திரைப்படமொன்று வந்து மக்களிடையே பீதியை கிளப்பி பணத்தை அள்ளிக் கொண்டு போனது உலகறிந்த உண்மை.

2012 ல் உலகம் அழியும் என்றால் உனக்கேன் இவ்வளவு பணம்..? இந்தக் கேள்வியே அந்தத் திரைப்படத்தின் கதைக்கருவின் மீதான சாட்டையடியாகும்.

இதுபோல ஆரூடக்காரர் நொஸ்ரடாம் சொன்னது போலவே உலகில் எல்லாம் நடக்கிறது என்று ஒரு புரளி கிளம்பி ஓய்ந்தது..

அவர் கூறிய செய்திகளில் பல அழிந்து தெளிவில்லாமல் இருப்பதாக சடைந்து கதையை முடித்தார்கள்.
இயேசுநாதர் கேட்டுக்கொண்டே யூதாஸ் காட்டிக் கொடுத்தான் என்று ஒரு புரளியை யூதாஸ் எவாங்கலியம் கிளப்பி யூதர் மீது விழுந்த களங்கத்தைத் துடைக்க முயன்றது.

இந்தப் பித்தலாட்டங்களின் சீரியல் வரிசையில் இப்போது வந்திருப்பதுதான்.. எதிர்வரும் 21.12.2012 ல் உலகம் அழியப்போகிறது என்ற கூத்தாட்டமாகும்.

இதற்கு நிபிறு பிரளயம் என்று பெயரிட்டுள்ளார்கள்.
இதற்கு அவர்கள் தரும் உதாரணம் ஒரு காலத்தில் தென்னமெரிக்காவில் வாழ்ந்த மாயர்கள் என்ற அறிவு மிக்க இனம் வகுத்துள்ள காலக்கணிப்பு ஏடு ஆகும்.

மாயர்களின் கணிப்பின்படி பால்வெளியின் சுற்றுகையும், புவியின் பிரயாணக்காலமும் 21.12.2012ல் முடிவடைகிறது, அது முடிவடையும் காலம் மாயர்கள் கணித்த கணிப்பில் இருக்கிறது என்றும் கூறுகிறது.
தென்னமெரிக்கப் பகுதியில் வாழ்ந்த இந்த இனத்தினர் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என்றும், பல விசித்திர கட்டிடங்களை கட்டி, வானியல் அவதானிப்புக்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்தார்கள் என்றும் கூறுகிறது.

ஆகவே இவர்களின் கணிப்பின்படி பார்த்தால் 21.12.2012 ல் உலகம் அழியும், அல்லது ஸ்தம்பித்து நிற்கும் என்று உலகளாவிய பாமர மக்கள் மனதில் பீதி கிளப்பப்பட்டுள்ளது.

இந்தியத் தொலைக்காட்சிகளில் வரும் ஆவி, பேய் போன்ற பித்தலாட்டங்களின் வரிசையில் இது அரங்கேறியுள்ளது.

கேள்வி 01 :

இதே தென்னமெரிக்காவில் மாயர்கள் வாழ்ந்த பகுதியில்தான் ஒரு காலத்தில் மிகப்பெரிய நரபலி நடைபெற்றது.
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருவராக வரவழைக்கப்பட்டு வருடத்தில் ஒரு நாள் தலைகள் வெட்டி நரபலி கொடுக்கப்பட்டும் வந்தது.. ஏன் தெரியுமா..?
அப்படி நரபலி கொடுக்காவிட்டால் சூரியன் வானத்தில் தொடர்ந்து வராது என்று கருதினார்கள்… ஒரு கட்டத்தில் நரபலி கொடுக்காமல் நிறுத்தியபோது சூரியன் வானில் வரக்கண்டார்கள்…
இதுதான் தென்னமெரிக்க அறிவியல் சரித்திரத்தில் முக்கிய வேராக இருக்கிறது, இந்தக் கோமாளித்தனத்தையே கண்டறிய முடியாதவர்கள்தான் மாயர்கள்.

கேள்வி 02 :

புவி அழியப் போகிறது என்று கூறும் மாயர்களுக்கு அது எப்பொழுது தோன்றியது என்பதை திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை… தோற்றத்தை துல்லியமாகக் கணிக்க முடியாத ஒருவன் முடிவை சரியாகக் கணிப்பான் என்று எதை வைத்து நம்புவது..?

கேள்வி 03 :

பூமியைத்தான் சூரியன் சுற்றுகிறது என்று நம்பிக்கொண்டிருந்த உலக மக்கள் இல்லை புவிதான் சூரியனை சுற்றுகிறது என்பதை அறிந்ததே மாயர்களுக்குப் பின்தான். 
நவக்கிரகங்களே கண்டறியப்பட்டதும் மிகவும் பிற்பட்ட காலத்தில்தான், மொத்தக் கிரகங்களின் சரியான தொகை தெரியாத கணிப்புக்கள் அனைத்தும் பிழையானவை என்பதை சொல்ல வேண்டியதில்லை.

கேள்வி 04 :

ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கை எல்லாக் கேள்விகளுக்கும் விடை தந்துள்ளது. புவி என்பதும் சூரியன் என்பதும், பால்வெளி என்பதும் தனித்தனியானதல்ல அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒன்றோடு ஒன்று பின்னி நிற்பதுதான் சார்பியல் கொள்கை. 

அதன்படி பார்த்தால் புவிக்கான காலக்கணிப்பு என்பது பயனற்ற வேலை.
ஒளி வளையும், அது புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும் என்பதைக் கண்டு பிடித்தவரும் ஐன்ஸ்டைன்தான்.
சார்பியல் கொள்கையின்படி புவி மட்டும் தனியே அழிய வேண்டிய தேவை இல்லை..
மேலும்..

2000 ம் ஆண்டில் உலகம் அழியும் என்று ஒப்பாரி வைத்தவர்கள் இன்னமும் உலகில் உயிருடன்தான் இருக்கிறார்கள், அவர்கள் தமது மடைத்தனத்தை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவில்லை.
உலகம் என்பது ஒற்றை நொடிக்குள் சுழன்று கொண்டிருப்பது, எதிர் காலமும், கடந்த காலமும் அதற்குக் கிடையாது.

எல்லாவற்றையும் புறந்தள்ளி அது வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இன்று நாம் காணும் உலகத்தைவிட அற்புதமான உலகமாக அது மாறும், மிகச்சிறந்த பெருமைதரும் கிரகமாக அது நிலைபேறு பெறும்…
இதில் எவருமே சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை..

பிரபஞ ;ச இரகசியத்தை கண்டறிந்தவர் எவரும் இல்லை…
உலகம் அழியப்போகிறது, அழிவு வரப்போகிறது என்று கதை கட்டுபவன் பக்காத்திருடனாகவும் இருக்கலாம் என்பதை கண்டு பிடிப்பதற்காகவேநமது உடம்பின் மேற்பகுதியில் 1200 கிராம் அளவில் மூளை படைக்கப்பட்டுள்ளது. 



நிபிறு பிரளயமா என்று சிரித்தபடி 22.12.2012 லும் புவி சிரித்தபடி சுழலும்.. தென்னமெரிக்காவில் நரபல கொடுக்காமல் விட்டபின்னும் விண்ணில் வந்த சூரியன் போல அன்றும் சூரியன் தெரிவான்..
s.ravikumar
thanks
alaikal.comhttp://my.opera.com/skrravee/blog/

Monday, 6 February 2012

குழந்தை வளர்ப்பில் இந்திய முறை சிறந்ததா? மேற்கத்திய முறை சிறந்ததா?


அபிக்யானுக்கு மூன்று வயது. அவன் தங்கை ஐஸ்வர்யாவுக்கு ஒரு வயது. அந்தக் குழந்தைகளின் நலனுக்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நார்வே நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முதலில் பேசினார். பிறகு வலியுறுத்தினார். பின்னர் நன்றி தெரிவித்தார்.
இந்தியர்களான அனுருப் பட்டாச்சார்யா-சகாரிகா இணையர் நார்வேயில் வசிக்கிறார்கள். அவர்கள் தங்களின் இரு குழந்தைகளையும் நார்வே நாட்டின் குழந்தை வளர்ப்பு சட்டவிதிகளுக்குப்ட்டு வளர்க்கவில்லை என்று அந்நாட்டு நீதிமன்ற உத்தரவின்படி, இரண்டு குழந்தைகளையும் அரசாங்க காப்பகத்திற்குக் (பார்னேவார்னே எனப்படும் குழந்தைகள் நல சேவை மையம்) கொண்டு சென்றுவிட்டார்கள். பட்டாச்சார்யாவின் பூர்வீகம் மேற்குவங்காளம். அதன் தலைநகர் கொல்கத்தாவில் வசிக்கும் அவருடைய பெற்றோர் மோனோடோஷ் சக்ரவர்த்தியும் ஷிகாவும் தங்கள் பேரப்பிள்ளைகளை மீட்டுத் தருமாறு, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை சந்தித்து முறையிட்டதும், இந்த விவகாரம் ஊடக விவாதமாகி, பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதன்பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நார்வேயின் வெளியுறவு அமைச்சரான ஜோனஸ் கார்ஸ்டோரிடம் பேசி, உடனடியாகவும் உடன்பாடானதுமான ஒரு தீர்வை மேற்கொள்ளும்படி வலியுறுத்தினார்.
நார்வேயில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் அந்நாட்டு அதிகாரிகள் பேசினர். இரண்டு குழந்தைகளையும் அவர்களின் சித்தப்பாவான அருணாபாஷ் பட்டாச்சார்யாவிடம் ஒப்படைப்பது என, குழந்தைகளின் பெற்றோர் சம்மதத்துடன் முடிவுக்கு வந்தனர். கொல்கத்தாவில் உள்ள அருணாபாஷை இந்திய அரசாங்கத்தின் செலவில் நார்வேக்கு அனுப்பி, குழந்தைகளை அழைத்து வருவது என்றும் இரண்டு குழந்தைகளுக்கும் 18 வயதாகும்வரை அவர்தான் காப்பாளர் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளின் பெற்றோர் என்ற உரிமையுடன் அனுருப்பும் சகாரிகாவும் தங்கள் பிள்ளைகளை சந்திக்கலாம் என்றும் நார்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்காகத்தான் நார்வே வெளியுறவு அமைச்சருக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நன்றி தெரிவித்தார்.
அந்த இரண்டு குழந்தைகளையும் அரசாங்கக் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று நார்வே நீதிமன்றம் ஏன் உத்தரவிட்டது? இங்குதான் இந்தியாவின் குடும்ப அமைப்புமுறை-குழந்தை வளர்ப்பு முறை ஆகியவற்றுக்கும் மேற்கத்திய நாடுகளின் முறைக்குமான வேறுபாடுகளும் மோதல்களும் வெளிப்படுகின்றன.
சின்னவயதில் நிலாவைக் காட்டி சோறு ஊட்டிய தாயை நினைத்து நினைத்து கவிஞர்கள் உருக்கமான கவிதை எழுதுவது இந்திய மரபு. தாயின் கைப்பக்குவத்தில் சமைக்கப்பட்ட உணவை அவளது கையாலேயே ஊட்டும்போது குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும் என்ற உணர்வு நமக்கு இருக்கிறது. மேற்கத்திய நாட்டின் நிலைமை வேறு. நார்வேயில் குழந்தைகளுக்குத் தாய் தன் கையால் சோறு ஊட்டினால் அது ஆரோக்கியக் கேடு. தாயின் உடலில் ஏதேனும் நுண்கிருமிகள் இருந்தால் அதுவும் குழந்தைக்கு ஊட்டப்படும் சோறுடன் சேர்த்து வயிற்றுக்குள் போய்விடும் என்கிற எச்சரிக்கை உணர்வு அங்கே நிலவுகிறது. நார்வேயில் உள்ள இந்தியத் தாய் தன் குழந்தைகளுக்குக் கையால் சோறு ஊட்டியதால், அவற்றின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து மாதம் வயிற்றில் சுமந்த தாய் அதன்பின் தன் குழந்தையை நெஞ்சிலும் மடியிலும் சுமப்பது இந்திய வழிமுறை. வளர்ந்து ஆளானபிறகும் எனக்கொரு தாய்மடி கிடைக்குமா என்று ஏங்குவது பிள்ளைகளின் வழக்கம். படுக்கும்போது தங்களுக்குப் பக்கத்தில் குழந்தைகளைப் படுக்கவைத்துக்கொண்டு அரவணைத்தபடியே தூங்குவர் இந்தியப் பெற்றோர். அங்கே நிலைமை வேறு. குழந்தைகள் படுப்பதற்கென வீட்டில் தனி இடம் இருக்கவேண்டும். அதுதான் குழந்தை எந்தவித நெருக்கடியுமில்லாமல் வசதியாகத் தூங்குவதற்குரியதாக இருக்கும் என்கிறது நார்வே நாட்டின் சட்ட திட்டம்.
அதுபோலவே, குழந்தைகள் படிப்பதற்கும் விளையாடுவதற்கும் வீட்டுக்குள் போதுமான இடவசதி இருக்கவேண்டும் என்கிறது நார்வே அரசாங்கம். நம் ஊரில் பெரும்பாலான வீடுகளில் இருக்கிற வசதியைக் கொண்டே படிக்கவேண்டிய நிலைமை. கல்விக்கடவுளான சரஸ்வதிக்கும் ஏனைய கடவுள்களுக்கும் வீட்டுக்குள் பூஜை அறை நிச்சயம் இருக்கும். படிப்பதற்கென்று தனி அறை ஒதுக்கும் பழக்கம் மிகத் தாமதமாகவே நம்மிடம் ஏற்பட்டுள்ளது.
நமது குழந்தை வளர்ப்பு முறைப்படி, பண்டிகை நாட்களில் டி.வியில், ‘இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக’ என்ற பெருமையுடன் அருந்ததி படத்தையோ, முனி படத்தையோ அதன் இரண்டாம் பாகம் எனப்படும் காஞ்சனாவையோ போட்டால் குடும்பம் மொத்தமும் உட்கார்ந்து விதம் விதமாக வந்து போகும் கிராஃபிக்ஸ் பேய்களை ரசிக்கலாம். செத்து செத்த விளையாடலாமா என்று வடிவேலுவிடம் முத்துக்காளை கேட்பதுபோல.
நார்வே நாட்டில் இப்படி செத்துச் செத்தெல்லாம் விளையாட முடியாது. குழந்தைகளின் பொழுதுபோக்கு-அவர்களுக்கான விளையாட்டு-அந்த விளையாட்டுக்கான பொம்மைகள் இவை பற்றியெல்லாம் அரசின் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. பட்டாச்சார்யா தம்பதிகள் வசிக்கும் வீடு குழந்தைகள் விளையாடுவதற்கான வசதியுடன் இல்லை என்றும், அவர்கள் படுப்பதற்கென தனி பெட் இல்லை என்றும் அவர்களின் வயதுக்குப் பொருந்தாத விளையாட்டு பொம்மைகளைப் பெற்றோர் வாங்கித் தந்திருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டுத்தான் குழந்தைகளைக் காப்பகத்திற்குக் கொண்டு சென்றது நார்வே அரசு.
இப்படியான ‘கொடுமை’யானக் குற்றங்களை சுமத்தி, அபிக்யானையும் ஐஸ்வர்யாவையும் அரசாங்கக் காப்பகத்திற்குக் கொண்டு போய்விட்டார்கள் என்பதுதான் இந்தியத் தரப்பின் குற்றச்சாட்டு.
தான் பெற்ற குழந்தையை வளர்க்க அதன் தாய்க்குத் தெரியாதா என்பது இந்தியர்களின் கேள்வி. குழந்தையை எப்படி வளர்க்கவேண்டும் என்ற சட்டவிதிகள் இருப்பது தாய்க்குத் தெரியாதா என்பது நார்வே தரப்பின் கேள்வி. ஊடகப் பட்டிமன்றங்கள் இங்கிருந்துதான் தொடங்கின.
மேற்கத்திய நாட்டுக் குழந்தைகளைவிட இந்தியக் குழந்தைகள்தான் பெற்றோரிடம் அதிகப் பற்றுடன் இருக்கின்றன என்று ஒரு தரப்பினரும், இந்தியாவில் வாழ விருப்பமில்லாமலோ- வாழும் சூழல் இல்லாமலோ- அல்லது இதைவிட நல்ல வசதியாக வாழலாம் என்றோ நார்வே சென்ற தம்பதியினர் அந்த நாட்டு சட்டப்படி குழந்தைகளை வளர்ப்பதுதானே முறையாக இருக்கும் என இன்னொரு தரப்பினரும் அனல்பறக்கும் வாதங்களை எழுப்பி வருகின்றனர்.
பட்டாச்சார்யாக்களின் குரல் இந்திய அரசாங்கத்தின் காதுகளில் பலமாக ஒலிக்க வைக்கப்பட்டதால், அந்த இரண்டு குழந்தைகளும் தங்கள் சித்தப்பாவின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அதுதான் இந்த பட்டிமன்ற விவாதங்களைக் கடந்த இப்போதைய ஆறுதல். இனி நீங்கள் சொல்லுங்கள்… குழந்தை வளர்ப்பில் இந்திய முறை சிறந்ததா? மேற்கத்திய முறை சிறந்ததா?

உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்

நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட "குமரிப் பெருங்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் "குமரிக்கண்டம்". ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் "தொல்காப்பியம்" மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்! இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்! இதனைத் தமிழர்கள் அனைவரிடத்திலும் பகிருங்கள் தோழமைகளே..

Sunday, 22 January 2012

பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்!





1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!


2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!


3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.


4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!


5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!


6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.


7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!


8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.


9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.


10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.


11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!


12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!


13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!


14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!


15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!


16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!


17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!


18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!


19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்!

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.http://www.facebook.com/skrravee

கைதொழில் கற்ற ஆசையா SAREE ROLLING AND STARCHING ANDPOLISHING TRAINING CONTACT: R.SUMATHI. PHONE:9444084594http://handskrsumathi.blogspot.com/