Thursday, 22 December 2011

மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம். UNIVERSAL DECLARATION OF HUMAN RIGHTS

மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்

மனிதக் குடுப்பதினைச் சேர்ந்த சகலரிவதும் உள்ளார்ந்த கௌரவத்தையும், அவர்கள் யாவரதும் சமமான, பராதீனப்படுத்த முடியாத உரிமைகளையும் அங்கீகரித்தலே உலகத்தில் சுதந்திரம், நீதி, சமாதானம் என்பவற்றுக்கு அடிப்படையாகவுள்ளதாலும், 
மனித உரிமைகள் பற்றிய அசிரத்தையும் அவற்றை அவமதித்தலும், மனுக்குலத்தின் மனச்சாட்சியை அவமானப்படுத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இடமளித்துள்ளதாலும், பேச்சுச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம், அச்சத்திலிருந்தம், வருமையிலிருந்தும் விடுதலை ஆகியவற்றை மனிதன் பூரணமாக துயக்கத்தக்க ஒரு உலகின் வருகையே சாதாரண மக்கின் மிகவுயர்ந்த குறிக்கோளாக எடுத்துச் சாற்றப்பட்டுள்ளதாலும், 
கொடுங்கோன்மைக்கும், அடக்குமுறைக்கும் எதிரான இறுதி வழியாக எதிரெழுச்சி செய்வதற்கு மனிதன் கட்டாயப்படுத்தப்படாமலிருக்க, ேவண்டுமேல் சட்டத்தின் ஆட்சியால் மனிதவுரிமைகள் பாதுகாப்பப்படுவது அத்தியாவசமாகவுள்ளதாலும், நாடுகளிடையே நட்புறவுகள் ஏற்படுத்தப்படுவதனை மேம்படுத்துவது அத்தியாவசியமாகவுள்ளதாலும், 
ஐக்கிய நாடுகள் சபையிற் கூடிய சகல மக்களும், பட்டயத்தில், அடிப்படை மனித உரிமைமகள் பற்றிய நமது நம்பிக்கையை ஒவ்வொரு மனிதப் பிறவினதும், கௌரவம், பெறுமதியை, ஆண் பெண்ணின் சம உரிமையை மீளவலியுறுத்தி அதிசுதந்திரச் சூழலில், சமூக முன்னேற்றம், உயர்ந்த வாழ்க்கைத் தரமாதியவற்றை மேம்படுத்தத் துணிந்துள்ளாராதலாலும், 
மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்களுக்கான உலக மதிப்பையும், அனுட்டானத்தையும் மேம்படுத்தலை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கூட்டுறவுடன் முற்று முழுதாகச் ெசயல் படுத்த அங்கத்துவ நாடுகள் சூளுறுதி கொண்டுள்ளனவாதலாலும், 
இச்சூளுறுதியைப் பரிபூரணமாக நடைமுறைப்படுத்துவதற்கு, இவ்வுரிமைகள் சுதந்திரங்கள் பற்றிய ெபாது விளக்கமிருத்தல் முக்கியமுடையதாதலாலும், இப்பொழுது: 
பொதுச் சபை பிரகடனப்படுத்துவதாவது 
சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனும் ஒவ்வொரு சாதனமும், இப்பட்டயத்தை இடையறாது மனத்திலிருத்தி, இவ்வுரிமைகள் சுதந்திரங்களுக்கான மதி்ப்பினை மேம்படுத்துதற்குக் கற்பித்தல் மூலமும், கல்வி மூலமும், தேசிய, சர்வதேசிய நிலைப்பட்ட நடவடிக்கைகள் மூலமும் முயலும் நோக்கிற்காகவும், அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றும், தத்தம் மக்களிடையேயும், அத்துடன் தங்கள் நியாயாதி்க்கத்தின் கீழ் வரும் ஆள்புலத்து மக்களிடையேயும், இவ்வுரிமைகள் சுதந்திரங்கள் முழு மொத்தமாக, வலிவும் பயனுறிதிப்பாடுமுடைய முறையில் ஏற்கப்பட்டு அனுட்டிக்கப்படுவதை நிலைநிறுத்துவதற்காகவும் பயன்படத்தக்க, சகல மக்களும் நாட்டினங்களும் தத்தமது சாதனையிலக்கின் பொது அளவாகக் கொள்ளத்தக்க இந்த மனித உரிமை உலகப் பொதுப் பிரகடனத்தைப் பொதுச் சபையானது எடுத்துச் சாத்துகின்றது.


உறுப்புரை 1 
மனிதப் பிறிவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர் ; அவர்கள் மதிப்பிலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும் மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடனொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும்.


உறுப்புரை 2 
இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லத வேறு அபிப்பிராயமடைமை, தேசிய அல்லத சமூகத் தோற்றம், ஆகனம், பிறப்பு அல்லத பிற அந்தஸ்து என்பன போன்ற எத்தகைய வேறுபாடுமின்றி, இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள எல்லா உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் எல்லோரும் உரித்துடையவராவர். 
மேலும், எவரும் அவருக்குரித்துள்ள நாட் டின் அல்லது ஆள்புலத்தின் அரசியல், நியாயாதிக்க அல்லது நாட் டிடை அந்தஸ்தின் அடிப்படையில் அது தனியாட்சி நாடாக, நம்பிக்கைப் பொறுப்பு நாடாக, தன்னாட்சியற்ற நாடாக அல்லது இறைமை வேறேதேனும் வகையில் மட்டப்படுத்தப்பட்ட நாடாக இருப்பினுஞ்சரி - வேறுபாெடதுவும் காட்டப்படலாகாது.


உறுப்புரை 3 
வாழ்வதற்கும், சுதந்திரத்தையுடையதாயிருத்த தற்கும் பாதுகாப்பிற்கும் சகலரும் உரிமையுடையோராவர்.


உறுப்புரை 4 
எவரும், அடிமையாக வைத்திருக்கபடுதலோ அல்லது அடிமைப்பட்ட நிலையில் வைத்திருக்கப்படுதலோ ஆகாது ; அடிமை நிலையும் அடிமை வியாபாரமும் அவற்றில் எல்லா வகையிலும் தடை செய்தல் வேண்டம்.


உறுப்புரை 5 
எவரும், சித்திரவதைக்கோ அல்லது கொடுமையான, மனிதத் தன்மையற்ற அல்லத இழிவான நடைமுறைக்கோ தண்டனைக்கோ மட்டப்படுத்தலாகாது.


உறுப்புரை 6 
ஒவ்வொருவரும் எவ்விடத்திலும் சட்டத்தின் முன்னர் ஓர் ஆளாக ஏற்றுக்கொெள்ளப்படுவதற்கு உரிமையுடையவராவர்.


உறுப்புரை 7 
எல்லோரும் சட்டதின் முன்னர் சமமானவர்கள். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள். இப்பிரகடனத்தை மீறிப் புரியப்பட்ட பராபட்சம் எதற்கேனும் எதிராகவும் அத்தகைய பராபட்சம் காட்டுவதற்கான தூண்டுதல் யாதேனுக்கும் எதிராகவும் எல்லோரும் சமமான பாதுகாப்புக்கு உரித்துடையவர்கள்.


உறுப்புரை 8 
அவ்வந் நாட்டின் அரசியலமைப்பினால், அல்லது சட்டத்தினால் அவர்களுக்கு அளி்க்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் ெசயல்களுக்காத் தகுதிவாய்ந்த தேசிய நியாய சபைகளினும் வழங்கப்படும் பயனுறுதியுடைய பரிகாரத்துக்கு உரிமையுடையவர்கள்.


உறுப்புரை 9 
ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் கைது ெசய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது.


உறுப்புரை 10 
அவர்கள் உரிமைகள், கடப்பாடுகள் பற்றியும் அவர்களுக்கெதிராகவுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் பற்றியும் தீர்மானிப்பதற்கு சுயாதீனமான நடுநிலை தவறாத நியாய சபையினால் ெசய்யப்படும் நீதியான பகிரங்கமான விசாரணைக்கு ஒவ்வொருவரும் உரிமையுடையவர்களாவர்.


உறுப்புரை 11 
1. தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்படும் எல்லோரும் பகிரங்க விளக்கத்தில் சட்டத்துக்கிணங்க அவர்கள் குற்றவாளிகளென காண்பிக்கப்படும் வரை, சுற்றவாளிகளென ஊகிப்படுவதற்கு ஊகிக்கப்படுவதற்கு உரிமையுடையவர்கள். அவ்விளக்கத்தில் அவர்களது எதிரவாதங்களுக்கு அவசியமான எல்லா உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் அவர்களுக்கிருத்தல் வேண்டும். 
2. தேசிய, சர்வதேசிய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் செயல் அல்லா ெசய்யால் புரியப்பட்ட நேரத்தில் அச்செயல் அல்லது செய்யாமை தண்டணைக்குரிய தவறென்றாக அமையாததாகவிருந்து அச்செயல் அல்லது செய்யாமை காரணமாக, எவரும் ஏதேனும் தண்டணைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் கொள்ளப்படலாகாது. அத்துடன், தண்டணைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாகவிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டம் விதிக்கப்படலாகாது.


உறுப்புரை 12 
ஒவ்வொருவரும் அவ்வவரது அந்தரங்கத்துவம், குடும்பம், வீடு அல்லது கடிதப் போக்குவரத்து என்பவை சம்பந்தமாக, ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் தலையிடப்படுவதற்கோ அல்லத அவரது மரியாதை, நன்மதிப்பு என்பவற்றின் மீதான தாக்குதல்களுக்கோ உட்படுத்தலாகாது. அத்தகைய தலையீட்டுக்கு அல்லது தாக்குதல்களுக்ெகெதிராக ஒவ்வொருவருக்கும் சட்டப் பாதுகாப்புக்கு உரிமையுடையவராவர்.


உறுப்புரை 13 
1. ஒவ்வொரு நாட் டினதும் எல்லைக்குள் சுதந்திரமாகப் பிரயாணஞ் ெசய்வதற்கும் வதிவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 
2. தமது சொந்த நாடு உட்பட ஏதேனும் நாட்டை விட்டுச் ெசல்லவும் தத்தமது நாட்டுக்குத் திரும்பவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.


உறுப்புரை 14 
1. வேறு நாடுகளுக்குச் ெசல்வதன் மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கும், துன்புறுத்ததலிலிருந்து புகலிடம் வாய்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு. 
2. அரசியற் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், அலல்து ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் ெநறிகளுக்கும் முரணான செயல்களிலிருந்து உண்மையாக எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் சம்பந்தமாகவும் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது.


உறுப்புரை 15 
1. ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை ஒவ்வொருவருக்குமுண்டு. 
2. எவரினரும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பபிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.


உறுப்புரை 16 
1. முழு வயதடைந்த ஆண்களும், ெபண்களும், இனம், தேசிய இனம் அல்லது சமயம் என்பன காராணமாக கட்டுப்பாெடதுவுமின்றி திருமண ெசய்வதற்கும் ஒரு குடு்ம்பத்தை உருவாக்குவதற்கும் உரிமை உடையவராவர். திருமணஞ் ெசய்யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும், திருமணம் குலைக்கப்டும் பொழுதும் அவரக்ள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு. 
2. திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும். 
3. குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது.


உறுப்புரை 17 
1. தனியாகவும் வேெறருவருடன் கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 
2. எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் இழக்கப்படுதல் ஆகாது.


உறுப்புரை 18 
சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதர் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையினுள் ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும், போதனை, பயில்நெறி, வழிபாடு, அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும், வேெறருவருடன் கூடியும் , பகிரங்கமாகவும் தனி்ப்பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும்.


உறுப்புரை 19 
கருத்துச் சுதந்திரத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது தலைலீடின்றிக் கருத்துக்களைக் கொண் டிருத்தற்கும், எவ்வழிவகைகள் மூலமும் எல்லைகளைப் பொருட்படுத்தாமலும் தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும் ெபறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கும்.


உறுப்புரை 20 
1. சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு. 
2. ஒரு கழகத்தினைச் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது.


உறுப்புரை 21 
1. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட் டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் ெதரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு. 
2. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட் டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு. 
3. மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பமானது, காலாலகாலம் உண்மையாக நடைெபறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும். இத்தேர்தல் பொதுவானதும், சமமானதுமாக வாக்களிப்புரிமை மூலமே இருத்தல் வேண்டுெமன்பதுடன், இரகசிய வாக்குமூலம் அல்லது அதற்குச் சமமான, சுதந்திரமான வாக்களிப்பு நடைமுறைகள் நடைெபறுதல் வேண்டும்.


உறுப்புரை 22 
சமுதாயத்தின் உறுப்பினர் என்ற முறையில் ஒவ்வொருவரும் சமூகப் பாதுகாப்புக்கு உரிமையுடையவர். அத்துடன் தேசிய முறய்சி மூலமும் சர்வதேசிய நாட்டிடை ஒத்துழைப்பு மூலமும் ஒவ்வொரு நாட் டினதும் அமைப்பு முறைக்கும் வனங்களுக்கும் இணையவும் ஒவ்வொருவரும் தத்தம் மதிப்புக்கும் தத்தம் ஆளுமைச் சுதந்திர முறையில் அபிவிருத்தி ெசய்வதற்கும் இன்றியமையாதவையாக வேண்டப்பெறும் பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகளைப் ெபருவதற்கும் உரித்தடையவராவர்.


உறுப்புரை 23 
1. ஒவ்வொருவரும் தொழில் ெசய்வதற்கான, அத்தொழிலினைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான ெசய்யுந் தொழில் நியாயமானதும் அநுகூலமுடையதுமான தொழில் நிபந்தனைகட்டு உரியோராயிருப்பதற்கான, தொழிலின்மைக்கெதிரான பாதுகாப்பு உடையோராயிருப்பதற்கான உரிமையை உடையர். 
2. ஒவ்வொருவரும் வேறுபாெடதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் ெபறுவதற்கு உரித்துடையவராவர். 
3. வேலை ெசய்யும் ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பத்தினரும் மனித மதிப்புக்கிணையவுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவதனை உறுதிப்படுத்தும் நீதியாவதும் அநுகூலமானதுமான ஊதியத்திற்கு உரிமையுடையோராவர். அவசியமாயின் இவ்வூதியம் சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளினால் குறை நிரப்பபடுவதாயிருத்தல் வேண்டும். 
4. ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற்கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பத்தற்கும். அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு.


உறுப்புரை 24 
இளைப்பாறுகைக்கும், ஓய்விற்கும் ஒவ்வொருவரம் உரிமையுடயர். இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை, சம்பளத்துடனான காலாகால விடுமுறைகள் அடங்கும்.


உறுப்புரை 25 
1. ஒவ்வொருவரும் உணவு, உைட, வீட்டு வசதி, மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினாலும் உடனலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாைம ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர். 
2. தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும் அைவ திருமண உறவிலிட் பிறந்தவையாயினுஞ்சரி அத்தலை உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பபினைத் துய்க்கும் உரிமையுடையன.


உறுப்புரை 26 
1. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ெதாடக்க அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். தொடக்கக் கல்வி கட்டாயப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும். 
2. கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி ெசய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படு்த்துமுகமாகவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும். அது சகல நாடுகளுக்கிடையேயும், இன அல்லத மதக் குழுவினருக்கிைடயேயும் மன ஒத்திசைவு, பொறுதியுணர்வு, தோழமை, ஆகியவற்றை மேம்படுத்துதல் வேண்டுமென்பதுடன், சமாதானத்தைப் பேணுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளை மேற்கொண்டு செல்லுவதற்குதவவும் வேண்டும். 
3. தமது குழந்தைகளுக்குப் புகட்டப்பட வேண் டிய கல்வியின் வகை, தன்மையை முதலிலே தெரிந்தெடுக்குமுரிமை ெபற்றோருக்குண்டு.


உறுப்புரை 27 
1. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு. 
2. அறிவியல், இலக்கிய, கலைப் படைப்பின் ஆக்கியற் கர்த்தர் என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி, பருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர்.


உறுப்புரை 28 
இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக, சர்வ தேசிய நாட் டிடை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர்.


உறுப்புரை 29 
1. எந்த ஒர சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகலிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு. 
2. ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதி்ப்பையும் ெபற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும். 
3. இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது.


உறுப்புரை 30 
இப்பிரகடனத்திலுள்ள எவையும். இதன்கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள எவற்றையும் அழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற்கும் அல்லது ெசயலெதனையும் புரிவதற்கும் எந்த ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.

Tuesday, 8 November 2011

இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் மது விலக்கு

குடி, குடிமக்கள், சட்டம்

‘குடி’யின் கெடுதல் குறித்து, தமிழ் சமூகத்தில் எவருக்கும் கட்டுரை எழுதி புரிய வைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இன்று தமிழகத்தில், பத்து விழுக்காடு மக்கள் அதாவது ஏழரை லட்சம் மக்கள் தினமும் மது அருந்துகின்றனர் என்றும், மேலும் 13 வயது பள்ளி மாணவர்களும் கூட மது அருந்துவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய நமது ஆட்சியாளர்கள், குடும்பத்தலைவனை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி அந்த குடியானவனைக் கொன்றுவிட்டு, அதன் மூலமாகக் கிடைக்கும் வருவாயைக்கொண்டு, அவனது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இப்படியாக ஒரு நாட்டின் குடிமக்கள், அவர்களின் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு போதைக்கு அடிமையாக்கப்பட்டு வருகின்றனர் என்பது கண்கூடு.

இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் மது விலக்கு:

“உணவு சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும், தேவையானவற்றைத் தமது தலையாய கடமைகளாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாகப் போதையூட்டும் மதுவகைகளையும், உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருள்களையும், மருந்துக்காக அன்றி வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்யவேண்டும்.” என்று இந்திய அரசியலமைப்பு சாசனம், 1950ல் ‘அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ள, பிரிவு 47 கூறுகிறது.

மது விலக்கு:

போதை தரக்கூடிய, மது வகைகளை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும், அதனை அருந்துவதற்கும் சட்டப்படி தடை செய்தல் முறையே மது விலக்கு என குறிப்பிடப்படுகிறது.

தமிழ் சமூகத்தில் தனி மனித வாழ்க்கையில் பெரும் ஒழுக்கக்கேடுகளாகக் கருதப்படுகின்றவற்றில் மது பழக்கமும் ஒன்று.

பௌத்த மதத்தைப் பின்பற்றுவோர் கடைபிடிக்கும் ‘’பஞ்ச சீலம்’’ என அழைக்கப்படும் ஐந்து கொள்கைகளில், நான்காவது கோட்பாடானது, மதுவையோ அல்லது வேறு வகையான போதை பொருட்களையோ பயன்படுத்தக் கூடாது என்பதாகும்.

உலக பொதுமறையாம் ‘திருக்குறளில்”, அறத்துப்பால் எனும் தலைப்பில் இயற்றப்பட்டுள்ள குறள்களில் 93வது அதிகாரமாக “கள்ளுண்ணாமை” குறித்து அய்யன் வள்ளுவரால் பாடப்பட்டுள்ளது..

மது விற்பனையின் மூலமாகக் கிடைக்கும் வருவாயினை, ஒரு நாட்டின் கல்வி மற்றும் பொது சேவைக்குப் பயன்படுத்துவது குற்றம். மேலும் மது விற்பனையின் மூலமாக பெறப்படும் பணமானது கறை படிந்த ஒன்று. எனவே அது தேசத்தைச் சீரழித்துவிடும் என்று இந்தியாவின் தேசத்தந்தையாகப் போற்றப்படும், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எச்சரித்தார்.

மது விலக்கை வலியுறுத்தி ராஜாஜி “விமோசனம்” என்ற பெயரில் இதழ் ஒன்றை நடத்தினார்.

தந்தை பெரியார், 1921ம் ஆண்டில் ஈரோட்டில் நடந்த கல்லுக்கடை மறியல் போராட்டத்தில் பங்குபெற்றதோடு மட்டுமின்றி, அதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் தனக்குச் சொந்தமாக தாத்தம்பட்டியிலுள்ள தோப்பிலிருந்த ஐநூறு தென்னை மரங்களையும் வெட்டினார்.

தமிழ்நாட்டில் மது விலக்கு:

ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது, கடந்த 1937ம் ஆண்டில் ராஜாஜியின் ஆட்சியின்போது “தமிழ்நாடு மது விலக்கு சட்டம்” என்றொரு சட்டம் இயற்றப்பட்டு தமிழகத்தில் மது விலக்கு அமலுக்கு வந்து விட்டது. இப்படியாக, இந்தியாவில் மதுவிலக்கு கொண்டு வந்ததற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. கடந்த, 1952ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் முழு மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது ராஜாஜி முதல்வராக இருந்தார். பின்னர், காமராஜர் ஆட்சி காலத்திலும், 1967ம் ஆண்டு அண்ணா முதல்வரான பிறகும்கூட தொடர்ந்து மது விலக்கு அமலில் இருந்தது.

தமிழ்நாட்டில் மது விலக்கு நீக்கம்:

சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டிலும், குஜராத் மாநிலத்திலும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் மதுவிலக்கை மற்ற மாநிலங்களுக்கும் பரவலாக்கும் நோக்கத்தில் மத்திய அரசானது, புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்றும், ஆனால் ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்திவரும் மாநிலங்களுக்கு மானியம் ஏதும் வழங்கப்படமாட்டாது என்றும் 1970ம் ஆண்டில் அறிவித்தது. ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்திவரும் மாநிலங்களுக்கு இப்படி தண்டனை அளிப்பதா? எங்களுக்கும் மானியம் கொடுங்கள், என்று அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தபோதும் அது ஏற்கப்படாததைத் தொடர்ந்து, அவரது ஆட்சியின் போது, 1971 ஆகஸ்டு மாதம் 30ம் நாள் முதல், மதுவிலக்கு தள்ளி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மது விலக்கை நீக்கும் அவசர சட்டம்:

தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு வழிவகுக்கும் வகையில் ‘’தமிழ்நாடு மது விலக்கு சட்டம்,1937 அமல்படுத்தப்படுவது அடியோடு நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும், அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’’ என்றும் கூறி, அவசர சட்டம் ஒன்றை கடந்த 1971ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30ம் நாள், சட்டசபை கூட்டம் கூட்டப்படாமலேயே, அப்போதைய ஆளுனர் கே.கே.ஷா பிறப்பித்தார். மேலும், தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி கள்ளுக்கடைகள் திறக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கருணாநிதி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகள், சாராயக்கடைகள், ஒயின் மற்றும் மது கடைகள் திறக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 7,395 கள்ளுக்கடைகளும், 3,512 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. சென்னை நகரில் 120 ஒயின் மற்றும் மது கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. பிற மாவட்டங்களில் தலா 60 முதல் 100 கடைகள் வரையிலும் திறக்கப்பட்டன.

மீண்டும் மது விலக்கு:

1973ம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் முதல் படியாக, 1973 ஜுலை 30ம் நாள் முதல் 7 ஆயிரம் கள்ளுக்கடைகளும், 1974 செப்டம்பர் 1ஆம் தேதி சாராயக் கடைகளும் தமிழ்நாட்டில் மூடப்பட்டன. 1981ம் ஆண்டில் மே மாதம் கள் மற்றும் சாராயத்தை உரிமத்துடன் விற்பனை செய்யலாம் என்று கூறப்பட்டது. 1984 வரையிலும், மதுபானங்களைத் தயாரிக்கும் உரிமம் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் ஜுலை மாதம் “தமிழ்நாடு மாநில வாணிப கழகம்”(TASMAC) நிறுவனம் உருவாக்கப்பட்டு, அந்த நிறுவனமானது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள் மற்றும் சாராயத்துக்கான மொத்த விற்பனைக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.

மது விலக்கு சட்ட திருத்தம், 2003:

‘’தமிழ்நாடு மது விலக்கு சட்டம், 1937ல், கடந்த 29.11.2003 அன்று, அப்போதைய ஜெயலலிதா ஆட்சியின் போது, மது தொடர்பாக சில்லறை விற்பனை செய்வதற்கும் அதிகாரம் பெற்ற ஒரே முற்றுரிமையாளராக, “தமிழ்நாடு மாநில வாணிப கழகம்” (TASMAC) மட்டுமே விளங்கும் என்று சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அடுத்து 2006ல் பொறுப்பேற்ற கருணாநிதி ஆட்சியின் போதும் அதேநிலைதான் தொடர்ந்தது.

மது விலக்கு கோரி வேண்டுகோள்:

கடந்த 2008ம் ஆண்டு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், அப்போதைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அவர்களது கோரிக்கையை பரிசீலித்து படிப்படியாக மது விலக்கை நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமென்றும், 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் மட்டும் தமிழகம் முழுவதிலும் 1,300 மதுக் கூடங்களும், 128 சில்லரை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில், படிப்படியாக முழு மது விலக்கினை எய்திடும் வகையில், முதற்கட்டமாக இனி புதிய மதுக்கடைகள் எதையும் தமிழகத்தில் திறப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே 6 சாராய ஆலைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்த நிலையில் தற்போது மேலும் 8 ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையின் கருத்து:

டாஸ்மாக்கினால் ஆண்டுக்கு 14000 கோடி வருமானம் வருகிறது. டாஸ்மாக்கை மூடினால், இந்த வருமானம் சமூக விரோதிகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடும். அதேவேளையில், இந்த வருமானத்தை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கினால், மாநில அரசு அவற்றை மூடுவதற்குத் தயார். தமிழகத்தில் இருந்த கள்ளசாராய வியாபாரிகள் பெருமளவில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் மாநிலத்தில் சாராயம் விற்பனை முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில், மதுவிற்பனை நடக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அப்படி செய்தால் தமிழகம் தனித்தீவு போல காட்சியளிக்கும். மேலும், கள்ளச்சாராயமும், மதுவிற்பனையும் நடக்க வழிவகுக்கும். தமிழகத்தோடு சேர்ந்து, அண்டை மாநிலங்களும் மதுவிலக்கை அமல்படுத்தினால் அது பூரண மதுவிலக்கிற்கான வெற்றியை தரும் என்றும் தமிழ்நாட்டின், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் நாள் சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.

மது விலக்கு அமலுக்கு வந்தால் கள்ள சாராயம் பெருகும் என்பது ஆட்சியாளர்களால் முன் வைக்கப்படும் வாதங்களில் ஒன்று. ஆனால் மது விலக்கு அமலில் இல்லாத தற்போது, கடந்த ஏப்ரல் 25, 2011ல், தமிழக அரசு கொடுத்த செய்தி அறிக்கையின் படி, தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்தப்பட்ட தொடர் மது விலக்கு சோதனையில் 1,057 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 134 பெண்கள் உள்பட 1,002 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் படி பார்த்தால், கள்ள சாராயம் எல்லா காலத்திலும் காய்ச்சப்படுகிறது என்பது புலனாகிறது.

தமிழ் சினிமாவில் மது விலக்கு:

1980களில் உன்னால் முடியும் தம்பி, பேர் சொல்லும் பிள்ளை, பொன்மனச் செல்வன் என்பது போன்ற பல்வேறு தமிழ் திரைப்படங்கள் மது விலக்கு தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.

மதுவினால் விளையும் தீமைகள்:

மது அருந்தியதால் ஏற்பட்ட போதையில் தன் மகளிடமே தகாத முறையில் நடந்த தந்தை, தன் மருமகளிடம் மது போதையில் மதிகெட்டு நடக்கும் மாமனார், தனக்கு மது அருந்த பணம் தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பெற்ற தாயைக் கொலை செய்ய துணிந்த மகன், நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறையினரே மது அருந்திவிட்டு, பொது இடத்தில் கட்டிபுரண்டு சண்டை, தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துகளில் 60 விழுக்காடு மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதால் தான் என்கிறது புள்ளிவிபரம்.....இப்படி மது பழக்கம் கருவையே கருவருக்கின்றது.

“மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும், உடலுக்கும் கேடு” என்று பள்ளி பாட புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதைப்படிக்கும் மாணவன் பள்ளியை விட்டு வெளியே வந்தால் அங்கு தென்படுவது டாஸ்மாக் கடை. என்னவொரு விந்தை? அதேபோல, குடி குடியைக் கெடுக்கும்” என்ற தமிழ் பழமொழியானது, அனைத்து மது புட்டிகளிலும் அச்சடிக்கப்பட்டு அரசால் விநியோகிக்கப்படுகிறது. போதாததற்கு, திரைப்படங்களில் மது அருந்தும் கட்சிகளின் போது, இதே வாசகம் ஒளிபரப்பப்படுகிறது. இதையெல்லாம் காணும்போது நகைச்சுவை எண்ணம் தான் மேலேழுகிறதேதவிர, “குடி” குறித்த விழிப்புணர்வு எண்ணம் ஏதும் தோன்றுவதில்லை. ஒரு நாட்டின் மண்ணின் மைந்தன், தன்னை அந்த நாட்டின் “குடிமகன்” என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியாத வகையில், இங்கே “குடிமகன்” என்ற வார்த்தைக்கு அர்த்தமே மாறிப்போய் உள்ளது.
மது விற்பனை செய்வது தனது அடிப்படை உரிமை என்று எவரும் கோர முடியாது என்றும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைவிற்குள் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது என்ற வாதத்தை, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சூழலில் எடுக்க முடியாது என்பது போன்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தொடர்ந்து வழங்கி வந்தாலும், மது விலக்கு தொடர்பான சரத்தானது, இந்திய அரசியலமைப்பு சாசனத்தில், ‘அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ளதால், அது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது அந்தந்த மாநிலங்கள் மட்டுமே. இதனால் இதில் நீதிமன்றங்களால் தலையிட முடியாத சூழலே நிலவுகிறது. ஆரம்பக் கல்வி வழங்க வேண்டியது, எப்படி அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள் என்பதிலிருந்து, அடிப்படை உரிமைக்கு மாற்றப்பட்டதோ அதேபோல, மது விலக்கும் அடிப்படை உரிமைக்கு மாற்றப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். பூரண மது விலக்கு மட்டுமே ஒரு நாட்டைத் துடிப்புடன் வைத்திருக்க முடியும்.http://rmlcollegestudentbangalouruniversity.blogspot.com/

Saturday, 29 October 2011

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? சரி பார்த்து கொள்ளுங்கள்


தமிழ் நாடு அரசு
தேர்தல் துறை
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? சரி பார்த்து கொள்ளுங்கள்


ஜனநாயகத்தில் மக்களுக்கு கிடைத்த ஒரே உரிமை ஓட்டுரிமை. பலரும் வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லாமல் வாக்களிக்க முடியாமல் திரும்பி இருக்கிறார்கள். மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளை மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்பு சட்ட படி பதினெட்டு வயது நிரம்பிய ஆண் பெண் இருபாலருக்கும் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. நம்மை யார் ஆட்சி செய்ய வேண்டியதும் நாம் தான். முதலில் உங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள். விடுபட்டிருந்தால் உடனடியாக வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர்களை சேர்க்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து கொள்ளுங்கள். 

இன்னும் இரண்டு மாதத்தில் தமிழ்நாடு சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் தலைவிதியை நீங்கள் தீர்மானிக்க போகிறீர்கள் எனவே உங்கள் பெயர்களை இந்த நேரத்தில் நீங்கள் சரி பார்த்து கொண்டால் உங்கள் உரிமையை நீங்கள் நிலை நாட்டலாம். தமிழ் நாடு தேர்தல் ஆணையத்தின் மூலம் கடைசியாக புதுப்பிக்க பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம் புதுப்பிக்க பட்ட வாக்காளர் பட்டியல் .  

தமிழில் தேட இந்த இணைப்பில் செல்லலாம்   இந்த இணைப்பில் சென்று உங்கள் மாவட்டம், உங்கள் தொகுதி நீங்கள் தேர்வு செய்து உங்கள் பெயர்கள் இருக்கிறதா என்றும் பார்க்கலாம். 

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? சரி பார்த்து கொள்ளுங்கள் http://www.elections.tn.gov.in/eroll/



reg.
ravi.

Friday, 21 October 2011

ஆய கலைகள் அறுபத்து நான்கு

1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);

2. எழுத்தாற்றல் (லிபிதம்);

3. கணிதம்;

4. மறைநூல் (வேதம்);

5. தொன்மம் (புராணம்);

6. இலக்கணம் (வியாகரணம்);

7. நயனூல் (நீதி சாத்திரம்);

8. கணியம் (சோதிட சாத்திரம்);

9. அறநூல் (தரும சாத்திரம்);

10. ஓகநூல் (யோக சாத்திரம்);

11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);

12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);

13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);

14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);

15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);

16. மறவனப்பு (இதிகாசம்);

17. வனப்பு;

18. அணிநூல் (அலங்காரம்);

19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்

20. நாடகம்;

21. நடம்;

22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);

23. யாழ் (வீணை);

24. குழல்;

25. மதங்கம் (மிருதங்கம்);

26. தாளம்;

27. விற்பயிற்சி (அத்திரவித்தை);

28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);

29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);

30. யானையேற்றம் (கச பரீட்சை);

31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);

32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);

33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);

34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);

35. மல்லம் (மல்ல யுத்தம்);

36. கவர்ச்சி (ஆகருடணம்);

37. ஓட்டுகை (உச்சாடணம்);

38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);

39. காமநூல் (மதன சாத்திரம்);

40. மயக்குநூல் (மோகனம்);

41. வசியம் (வசீகரணம்);

42. இதளியம் (ரசவாதம்);

43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);

44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);

45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);

46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);

47. கலுழம் (காருடம்);

48. இழப்பறிகை (நட்டம்);

49. மறைத்ததையறிதல் (முஷ்டி);

50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);

51. வான்செலவு (ஆகாய கமனம்);

52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);

53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);

54. மாயச்செய்கை (இந்திரசாலம்);

55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);

56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);

57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);

58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);

59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);

60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);

61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);

62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);

63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);

64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

Monday, 10 October 2011

நன்றாக பேசுவதில் எப்படி எல்லாம் பேசக் கூடாது -


பிறருடன் பேசும் போது, கேட்பவரால் சகித்துக் கொள்ள முடியாதவாறு பேசுவர் சிலர். இப்படி பேசுவதில் முக்கியமாக ஆறு வகைகள் உள்ளன.

* இஷ்டமில்லாமல் பேசுபவர்: தனக்கே இஷ்டமில்லாமல் பேசுவது ஒருவகை. இதை, எதிராளிக்கும் கேட்க இஷ்டம் இருக்காது.

* இரைந்து உணர்ச்சி வசப்பட்டுப் பேசுபவர்: இதனால் கேட்பவரின் கவனம் பேசுபவரின் உணர்ச்சியில்தான் இருக்குமே தவிர, என்ன கூறு#கிறார் என்பதில் இருக்காது.

* முணுமுணுப்பவர்: எத்தனை கவனமாக கவனித்தாலும், இவர் என்ன சொல்கிறார் என்றே புரியாது.

* மூக்கால் பேசுபவர்: இவர் பேசுவதை கேட்கும் போது, இவர் ஏன் உடனடியாக ஒரு டாக்டரைப் பார்க்கக் கூடாது என்று நினைக்கத் தோன்றும்.

* வேகமாக பேசுபவர்: மூச்சு விடாமல் சிலர் வேகமாக பேசும் போது, சில சமயம் என்ன பாஷை பேசுகிறார் என்றே புரியாது.

* தயங்கி, தயங்கி பேசுபவர்: என்ன பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம் என்றே புரியாமல், தயங்கி, தயங்கி நீண்ட நேரம் எடுத்து, சில வார்த்தைகளைப் பேசுவர். இவைகள் தவிர்க்கப்பட வேண்டும்.


நன்றாக பேச…: பேசும் போது, உங்கள் குரல் சரியாக இல்லை என்று நினைத்தீர்களானால், அதற்கு காரணம் சரியாக மூச்சு விடு வதில்லை என்று அர்த்தம். தேவையான அளவுக்கு பேசும் போது, வாயையும் திறப்பதில்லை என்பது ஒரு முக்கியக் காரணம். யார் மூச்சு விடுவதில் சீராக வைத்துக் கொள்ளாமல் இருக்கிறாரோ, அவரால் சரியாகவும் பேச முடியாது. சரியாக பேச தொண்டைக்குப் பயிற்சி தேவை. பேசுவது தெளிவாகப் புரிய எந்த அளவுக்கு திறக்க வேண்டுமோ, அந்த அளவுக்குத் திறப்பதால் நஷ்டம் ஏதுமில்லை. தனிமையான இடத்தில் இரைந்து எதையாவது படிப்பதன் மூலம், தெளிவாகப் பேசுவதற்குப் பயிற்சி பெறலாம்.

சின்னச் சின்ன தடுமாற்றங்களால் கூட பல நேரங்களில் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடும்


ல அனுபவங்களைக் கொண்டதுதான் வாழ்க்கை. சின்னச் சின்ன தடுமாற்றங்களால் கூட பல நேரங்களில் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடும்.
சாவியை மறந்து வைத்துவிட்டு செல்வது, சீப்பை தலையில் வைத்துக் கொண்டு தேடுவது போன்றவைதான் சின்னச் சின்ன தடுமாற்றங்கள். இதை கவனக் குறைவு என்றும் சொல்லலாம். எதையும் முறையாக செய்து பழகாதவர்களுக்கும், ஞாபகமறதி கொண்டவர்களுக்கும் இதுபோன்ற தடுமாற்றங்கள் நிறைய ஏற்படும்.
குடும்பத்தில் பலரும் புழங்கும் சூழல் இருப்பதாலும் பல தடுமாற்றங்கள் ஏற்படும். அதாவது நீங்கள் பயன்படுத்தும் பொருளை மனைவியோ, குழந்தைகளோ இடம் மாற்றி வைத்துவிட்டாலும் குழப்பமும், தடுமாற்றமும் வரும்.
இப்படி சின்னச் சின்ன தடுமாற்றங்களால் ஏற்படும் இழப்புகள் சாதாரணமானவை அல்ல. பர்ஸை மறந்துவிட்டு பஸ் பயணம் கிளம்பினால் சிக்கல் தானே! பள்ளிக்கு சென்ற பிறகு `ஐடென்டி கார்டு’ இல்லாவிட்டால் தண்டனை கொடுப்பார்கள் தானே, இப்படித்தான் சின்னச் சின்னத் தடுமாற்றங்கள் அதைத் தொடர்ந்து சில பிரச்சினைகளையும், இழப்புகளையும் தந்துவிடும்.
அது சில நேரங்களில் பெரிய இழப்பாகவும் இருக்கும். வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கு சென்ற இடத்தில் `ஒரிஜினல்’ சான்றிதழ் கொண்டு செல்ல மறந்ததால் கிடைக்க இருந்த வேலையை இழந்தவர்கள் உண்டு. தெரியாத இடத்தில் பணம், சான்றிதழை தொலைத்துவிட்டு தடுமாறியவர்களும் உண்டு.இப்படி தடுமாற்றங்கள் வராமல் இருப்பதற்கு சிறந்த வழி, சீராக செயல்படுவதுதான். அதாவது செல்போன், ஐ.டி. கார்டு, பைக் சாவி போன்ற சின்னச் சின்ன பொருட்கள் யாவற்றையும் ஒரே இடத்தில் வைத்துப் புழங்குவது எதையும் மறக்காமல் எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும்.
குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு வேலையை முடிக்காவிட்டாலும் அது அடுத்த வேலையில் தாமதத்தையும், தடுமாற்றத்தையும் தரும். அப்புறம் இன்னொரு விஷயம், இப்படி ஒரு வேலையை செய்து முடிக்காததால் ஏற்படும் மனஅழுத்தத்தைப்போல் வேறு பிரச்சினை எதுவுமில்லை. அதாவது ஒரு வேலையை முடிக்காவிட்டால் அது தொடர்ச்சியாக வரும் அடுத்த வேலையில் எதிரொலிக்கும். இடையில் புகும் நபர்களின் மீது எரிச்சலைக் கொட்ட வைக்கும். அதனால் வேலையையும், நன்மதிப்பையும் பாதிக்கும். கோபம், மன அழுத்தம் போன்றவற்றையும் கொண்டு வந்துவிடும். எனவே எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்யுங்கள். ஞாபகமறதி, தடுமாற்றங்களை தவிர்த்திடுங்கள்!

உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?


இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?
- உயிரோடு இருப்பதா?
- மகிழ்ச்சியாக இருப்பதா?
- பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா?
- தோல்விகளில் கற்றுக் கொள்வதா?
- வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?
- தன்னலமற்ற அர்ப்பணிப்பா?
- தத்துவங்களின் அணிவகுப்பா?
…. இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.
சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மேலும், மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வை பறிகொடுக்கிறான்.
இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம்.
தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.
அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா…? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
வாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுப வங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங் களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண் டும். அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக் கிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.

ஒரு ஜெர்மனிய பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ளமாட் டான்” என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்..! இத்தனை யும் பெற்று, சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கும் மனிதன், சில நேரங்களில் மிருகத்தை விட கீழ்நிலைக்கு வந்து விடுகிறான். போகும் திசை தெரியாமல் மயங்கி நிற்கிறான். அப்போது தான் வாழ்க்கையில் பயம் ஏற்படுகிறது.
துன்பம் துரத்தும் போது ஆன்மிகமும், அறிவியலும் அவனுக்கு துணை போவதில்லை. தோல்விக்கு பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க அவனுக்கு பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவைதேடிக் கொள்கிறான். தோல்விகள் நமக்கு நல்ல அனுபவங்களை தந்து, நம்மை பலசாலியாக்குகிறது.
நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது. ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில்தான் தோன்ற மறுக்கிறது. அப்போது வாழ்க்கை வெறுமையாகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.
இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது ஓர் கர்மயோகியைப் போல தன் பணியை செய்துக் கொண்டிருக்கிறது.
சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆனால் இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகமில்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, டென்ஷன், தற்கொலைகள், இப்போது தான் அதிகமாகி வருகிறது. எந்த அறிவியல் வளர்ச்சியும் இவர்களை வாழவைப்பதில்லை. இந்த நவீனயுகத்தில் தற்கொலை தடுப்பு மையங்கள் ஆங்காங்கே உருவாகி வருவது வரமா? சாபமா?
உங்களுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு தேவையான முன் உதாரணம் இருக்க வேண்டும். தோல்விகளை தாண்டி வெளிவந்தால் தான் அங்கே வெற்றி நம்மை வரவேற்க காத்திருக்கும். வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன்வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு.
தோல்வியை கண்டு மிரண்டு போய் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம். தோல்விக்கு பின் வெற்றி என்ற வாக்கு பொய்யா, மெய்யா என்று பொறுத்திருந்து பார்க்கலாமே.
இன்று பல்வேறு சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் விரக்தியின் எல்லைக்கே போய்விடுகிறார்கள். நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற தத்துவம் அவர்களுக்கு புரிவதில்லை.
நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம்.
- நம்மைவிட உடலில் பலசாலி யானை
- நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை
- நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.
இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே மனோபலம் கொண்டவன். நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது.

உங்கள் தன்னம்பிக்கையை சோதிக்க ஒரு சுய பரிசோதனை

வெற்றியின் ஆணிவேர் தன்னம்பிக்கை. உங்களிடம் தன்னம்பிக்கை மிகுந்திருந்தால் நீங்களும் வெற்றியாளராக வலம் வரலாம். உங்கள் தன்னம்பிக்கையை சோதிக்க ஒரு சுய பரிசோதனை இங்கே
உங்கள் உடல்வாகு எப்படிப்பட்டது?
அ. எனது உடல் அழகான `ஸீரோ சைஸ்’ கொண்டது. அதில் எனக்கு திருப்திதான்!
ஆ. மேனியழகு பொலிவாகத்தான் இருக்கிறது. இன்னும் வசீகரிக்கும் தோற்றமுடன் எனது உடலை வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.
இ. மக்கள் நான் வசீகரிக்கும் வனப்புடன் தோன்றுவதாகக் கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைப்பதில்லை!
நீங்கள் வெகுநாள் விரும்பிய முக்கிய மனிதரை எதிர்பாராத விதமாக சந்திக்கிறீர்கள்? அப்போது…
அ. நானே முதலில் பேச்சைத் தொடங்கி அவருக்கும், எனக்கும் இடையே பரஸ்பர கருத்தொற்றுமை இருக்கிறதா? என்பதைக் கண்டறிவேன்.
ஆ. பார்த்ததும் ஏற்கனவே அறிமுகமானவர் மாதிரி அரட்டையடிக்கத் தொடங்கிவிடுவேன்..!
இ. அவர் என்னிடம் முதலில் பேச மாட்டாரா? என்று காத்திருப்பேன்!
சொந்தபந்தங்களுடன் உறவை பேணுவதில் நீங்கள் எப்படி?
அ. எப்போதாவது கருத்துவேறுபாடு ஏற்பட்டு உறவில் விரிசல் விழுவதுபோல தோன்றினால் நான் என் நிலையை ஆய்வு செய்து தவறுகள் இருந்தால் அதற்காக மன்னிப்புக் கோரி உறவு முறையை மேம்படுத்த முயற்சிப்பேன்.
ஆ. உறவுமுறை நன்றாகவே இருக்கிறது..! ஆனாலும் சில பிரச்சினைகள் வந்து போகின்றன.
இ. உறவுகள் என்றாலே தொல்லையும் துயரமும்தான்..! அவர்கள் என்னை புரிந்து நடந்து கொள்ளவே மாட்டார்கள்!
உங்கள் முகத்தில் திடீரென்று முகப்பரு தோன்றினால் என்ன செய்வீர்கள்..?
அ. முகப்பரு மருந்து தடவுவேன். இன்றைய முகப்பரு நாளைக்கு மறைந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு அடுத்த வேலையில் கவனம் செலுத்துவேன்.!
ஆ. முகப்பருவைக் கண்டதும் உடனே நல்ல டாக்டரை நாடி செல்வேன். டாக்டரிடம் செல்வதை தள்ளிப்போட மாட்டேன்.
இ. எனக்கு உடம்பு சரியில்லை என்று கூறிவிட்டு, அன்றைய அலுவலை ஒத்திப்போட்டுவிட்டு கவலையில் ஆழ்ந்து விடுவேன்!
நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராத துன்பத்தில் மாட்டிக்கொண்டால்…?
அ. முதல்ஆளாக ஓடிப்போய் அவருக்கு உதவி செய்வேன்..!
ஆ. அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு என்ன தேவைப்படுகிறது என்பதைக் கேட்டறிந்து உதவி செய்வேன்!
இ. உதவி செய்ய எனக்குத் தெரிந்த இன்னொரு நண்பரை அனுப்பி வைப்பேன்..!
உங்களது வாழ்க்கை எப்படி செல்கிறது?
அ. எனக்கு உண்மையான நண்பர்கள் அதிகம். அதனால் வாழ்க்கை ஆனந்தமாய் கழிகிறது..!
ஆ. ஏதோ இருக்கிறேன். நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அங்கங்கே தனித்தனியாக இருக்கிறார்கள். எனக்கு ஏற்படும் கஷ்டநஷ்டத்தை கண்டுகொள்ள ஆளில்லை.
இ. இது என்ன வாழ்க்கை. ஒரு சந்தோஷமும் இல்லை. வாழ்க்கையே வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது!
ஒரு குழுவை வழிநடத்தும் தலைவராக உங்களை தேர்வு செய்தால்…?
அ. உடனடியாக ஒத்துக்கொள்வேன்!
ஆ. நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கேட்டறிவேன். அதன்பிறகு தலைமை தாங்குவது பற்றி முடிவு செய்வேன்.
இ. நான் என்ன செய்வது என்று அறியாமல் தவிப்பேன். தலைமை தாங்க யோசிப்பேன்!
உங்கள் பஸ் பயணம் திடீரென்று ரத்தாகிறது, தனியார் பஸ் நிறுவனம் அதற்கு மாற்று ஏற்பாடு செய்யவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. என்ன செய்வீர்கள்…?
அ. கம்பெனி மேலாளரை சந்தித்து, இழப்பீடு தர வற்புறுத்துவேன்.
ஆ. என் கோரிக்கையை அமைதியாகத் திரும்பத் திரும்ப எடுத்துரைப்பேன்!
இ. திரும்ப திரும்ப கேட்பதால் பயனில்லையென்று கருதி, இன்னொரு பஸ்சில் ஏறி வீட்டிற்கு போய்விடுவேன்.
உங்கள் பதில்களில் `அ’ விடைகள் அதிகமாக இருந்தால் நீங்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்தான். எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு! எப்படிப்பட்ட சூழ்நிலையையும் உங்களுக்குச் சாதகமாக்கி நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
அதிக கேள்விகளுக்கு விடை ஆ-வை தேர்வு செய்திருந்தால் நீங்கள் எதுவும் நல்லதாகவே நடக்கும் என்று நம்புவீர்கள். சிறிது சஞ்சலங்கள் தோன்றினாலும் சூழ்நிலையை சமாளிக்கும் வல்லமை உங்களிடம் இருக்கும்.
பதில் `இ’ உங்கள் விடைகளில் மிகுந்திருந்தால் நீங்கள் நம்பிக்கை குறைவானவர். உங்கள் வாழ்வியல் முறைகளை சீர்திருத்துவதோடு மன தைரியத்துடன் செயல்படத் தொடங்குங்கள்.

Thursday, 22 September 2011

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாவதில் நமது பங்கும் இருக்கிறது.

அம்பேத்கார் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு அதன் பணியை முடித்து நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்த நாள் நவம்பர் 26, 1949. இந்த நாள் ஆண்டுதோறும் இந்தியாவிற்கான சட்ட நாளாக நினைவுகூறப்படுகிறது.

அம்பேத்கார் தலைமையிலான குழு எழுதிய இந்திய அரசியல் சட்டத்தைப் பலரும் புகழ்ந்து கொண்டிருந்த நிலையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டம்" என்பது மாற்றப்பட கூடாத வேதப்புத்தகம் அல்ல. குடி மக்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றத்திற்குரியதே என்பதை உணர்த்தி, தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் முதல் சட்டதிருத்தத்திற்கு வழி வகுத்தவர் தோழர் பெரியார்.

பெரியாரின் தோழரான திருச்சி வே. ஆனைமுத்து அவர்கள், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஒரு மோசடி” என்ற தலைப்பில் ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் அவர் எழுப்பியுள்ள பல விவகாரங்களுக்கு இன்னும் பதில் அளிக்க முடியாத நிலையே உள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் மக்களுக்கு தேவையான வகையில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மிகக்குறைவே. ஆட்சியில் இருப்பவர்களின் வசதிக்கும், அதிகாரத்தை ஒரிடத்தில் குவிப்பதற்குமே இந்திய அரசியலமைப்பு சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளின் நடுவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்களாக அம்பேத்கார் முன்வைத்த பல கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அந்தக் கொள்கைகளுக்கு எதிரான திசையிலேயே அனைத்து அரசு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி-4, அரசு கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாடுகள் (DIRECTIVE PRINCIPLES TO STATE POLICY) என்ற பிரிவின்கீழ் பல முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவையாவன...

38. மக்களின் நலமேம்பாட்டிற்காக அரசு சமூக ஒழுங்கைப் பாதுகாத்தல்:

(1) பொதுமக்களின் நலன் மற்றும் சமூக மேம்பாட்டிற்காகவும் பாதுகாப்பிற்காகவும், அரசு, நீதி, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தேசிய வாழ்வில் உள்ள எல்லா அமைப்புகளிலும் அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும்.

(2) அரசு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கிடையில், தனிப்பட்ட குழுக்களுக்கிடையில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளை குறைத்தல்.

39. சில கொள்கைகளை அரசு பின்பற்றுதல் வேண்டும்:

அரசு குறிப்பாக-
(அ) குடிமக்கள், ஆண்-பெண் பேதமின்றிச் சரிசமமாக வாழ்வதற்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்கும்;

(ஆ) உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் சமுதாயத்தின் பொதுநலன் கருதி அனைவருக்கும் கிடைப்பதற்காக அவற்றின் உரிமை - கட்டுப்பாடு பொதுவாக பகிர்ந்தளிக்கப்படுவதற்கும்;

(இ) செல்வமும், உற்பத்தியும் பொதுத்தீங்கின்றி, தேக்கமடைவதைத் தவிர்க்கும் பொருளாதார அமைப்பை செயல்படுத்துவதற்கும்;

(ஈ) ஆண், பெண் இருபாலாருக்கும் இணையான வேலைக்கு, இணையான ஊதியம் அளிப்பதற்கும்;

(உ) வேலையாட்களின் உடல்நலத்தையும், திறத்தையும், ஆண், பெண், சிறு குழந்தைகள் ஆகியோரை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கும், மற்றும் குடிமக்களைத் தமது வயதுக்கும் திறனுக்கும் பொருத்தமில்லாத ஒரு வேலைக்குப் பொருளாதார தேவையின் பொருட்டு தள்ளப்படாது தடுப்பதற்கும்;

(ஊ) குழந்தைகள் சுதந்திரமான நிலையில் கண்ணியத்தோடும் நல்வாழ்வுடனும் வளர்வதற்கும், அப்படி வாழ்வதற்கான வசதிகளையும், வாய்ப்புகளையும் அளிப்பதற்கும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சுரண்டப்படுவதினின்றும் பாதுகாப்பதற்கும், ஒழுக்கம் மற்றும் பொருளாதாரம் காரணமாக நிராதரவாக விடப்படாமல் காப்பதற்கும் தமது கொள்கையைத் தேர்வு செய்ய வேண்டும்.

40. கிராம ஊராட்சி அமைப்புகள்:

கிராம ஊராட்சிகளை அமைக்கவும், அவை தன்னாட்சி பெற்று செயல்பட தேவையான அதிகாரங்களை வழங்க வேண்டும்.

41. சில தறுவாய்களில் வேலை, கல்வி, பொது உதவிக்கான உரிமை:

வேலை, கல்வி உரிமையின் பொருட்டு, வேலையில்லாதபோது முதிய வயதினர், நோயுற்றோர், தொழில் புரிய இயலாதோர் மற்றும் தேவையற்ற வறுமையில் வாடுவோர் ஆகியோரைப் பாதுகாக்கும் வகையில் அரசு கொள்கைகளை வகுக்க வேண்டும்.

42. நியாயமானதும், மனிதத்தன்மையோடு கூடியதுமான தொழில் மற்றும் மகப்பேறு நிவாரணங்களுக்கான வகையங்கள்:

நியாயமானதும் மனிதத்தன்மையோடு கூடியதுமான தொழில் மற்றும் மகப்பேறு நிவாரணங்களைப் பாதுகாப்பதன் பொருட்டு, அரசு வகையங்களை உருவாக்க வேண்டும்.

43. வேலையாட்களுக்கான வாழ்வூதியமும் இன்ன பிறவும்:

வேளாண்மை, தொழிற்சாலை மற்றும் வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வாழ்வூதியம், நாகரிகமான வாழ்க்கைத்தரத்திற்கு உறுதியளிக்கும் வகையிலான தொழில்கள், போதுமான ஓய்வு, சமூக மற்றும் பண்பாட்டுக்கான வாய்ப்பு ஆகியன கிடைப்பதற்கு உரிய முயற்சிகளைத் தகுந்த சட்டத்தின் வாயிலாகவும் அல்லது பொருளாதார அமைப்புகள் மூலமாகவும் அல்லது வேறு ஏதேனும் வகையிலும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

43அ. தொழிற்சாலைகளில் நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்றல்:

தொழிற்சாலைகளை நடத்தும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் அல்லது நிர்வாகங்களின் நிர்வாகப்பணியில், தொழிலாளர்கள் பங்கு கொள்ளும் வகையில், அரசு தகுந்த சட்டத்தின் மூலம் அல்லது வேறு ஏதேனும் வகையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

44. குடிமக்களுக்கு ஒரே மாதிரியான உரிமையியல் சட்டம்.

குடிமக்களுக்கு இந்திய நிலவரை முழுவதும் ஒரே மாதிரியான உரிமையியல் சட்டத்திற்கு அரசு முயற்சித்தல் வேண்டும்.

45. ஆறு வயதுக்கு உட்பட்ட இளங்குழந்தைகளைப் பாதுகாப்பதும் கல்வி அளிப்பதும்:

ஆறு வயது நிறைவடைகின்றவரையில் அனைத்து இளங்குழந்தைகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்குக் கல்வி அளிக்கவும் அரசு முயற்சிக்க வேண்டும்.

46. பட்டியல் மரபினர், பட்டியல் பழங்குடி மரபினர் மற்றும் வேறு பலவீனப் பிரிவினர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்:

பலவீனப் பிரிவு மக்களிடையே பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு சிறப்பாகக் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாகப் பட்டியல் மரபினர் மற்றும் பட்டியல் பழங்குடி மரபினரின் பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு சிறப்பாகக் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானதாகும். மற்றும் அவர்களை சமூக அநீதியினின்றும், அனைத்து வித சுரண்டல்களிலிருந்தும் பாதுகாத்தல் வேண்டும்.

47. ஊட்டச்சத்து, வாழ்க்கைத்தரம், உடல்நல மேம்பாட்டை உயர்த்துவதற்கான அரசின் கடமை:

ஊட்டச்சத்தை மேம்படுத்துவதையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும் உடல்நலத்தை உயர்த்துவதையும் அரசு தமது கடமையாக கொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக போதையூட்டும் மதுபானங்கள், போதைமருந்துகள் ஆகியன மருந்துக்காகப் பயன்படுத்துவதைத் தவிர வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

48. வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கான அமைப்பு:

வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கு நவீன அறிவியல் முறைகளைப் புகுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக உயர்ரகக் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவற்கும் பசுக்கள், கன்றுகள் மற்ற பால்தரும் விலங்குகள் வறட்சியுள்ள கால்நடைகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடுப்பதற்கும் வேண்டிய முயற்சிகளை அரசு எடுத்தல் வேண்டும்.

48அ. சுற்றுச்சூழலை பாதுகாத்தலும், மேம்படுத்தலும் மற்றும் வனங்கள் வனவிலங்குகளை பாதுகாத்தலும்:

நாட்டின் சுற்றுச்சூழலை, அரசு பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வேண்டும். மற்றும் நாட்டின் வனங்கள், வனவிலங்குகளைப் பாதுகாத்தல் வேண்டும்.

49. தேசிய முக்கியத்துவமுள்ள நினைவுச்சின்னம், இடங்கள், பொருள்களைப் பாதுகாத்தல்:

தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறிவிக்கப்பட்ட நினைவுச்சின்னம், அல்லது இடம் அல்லது கலைப் பொருட்கள் அல்லது வரலாற்றுச் சின்னங்களைச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிதைப்பது, நீக்குவது, முடிவு செய்வது அல்லது ஏற்றுமதி செய்வதினின்று பாதுகாப்பது ஆகியவை அரசின் கடமை.

50. நிர்வாகத்தினின்று நீதித்துறையைத் தனியே பிரித்தல்:

அரசின் பொதுப்பணியிலிருந்து நீதித்துறையைத் தனியாகப் பிரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

....என்பன உள்ளிட்ட மக்கள் நல அம்சங்கள் அரசின் கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 37, “இந்தப் பகுதியில் காணப்படும் கொள்கைகள் அனைத்தும் நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையானவைகள்; இந்த கொள்கைகளின் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது அரசின் கடமை” என்று கூறப்பட்டிருந்தாலும், “இந்த அம்சங்களை நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்த முடியாது” என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது, இந்த அம்சங்களை நிறைவேற்றுமாறு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது சுதந்திர இந்தியாவின் வயது இரண்டுதான். அந்த நிலையிலேயே மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் கோரி வழக்குகள் தொடரப்பட்டால் நிர்வாகம் ஸ்தம்பித்துவிடக்கூடும் என்ற நிலையில் இந்த பிரிவு 37 எழுதப்பட்டது. காலப்போக்கில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் சொல்லப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய சட்டங்களை இந்திய ஆட்சியாளர்கள் நிறைவேற்றி விடுவார்கள் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இந்த அம்சங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பதோடு இந்த அம்சங்களுக்கு எதிரானதும், மக்கள் விரோதத் தன்மை கொண்டதுமான பல சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் அரசியல் சட்டத்தின் பிரிவு 37 நீடிப்பது மக்களுக்கு எதிரானது.

இந்தியாவில் உள்ள சட்டங்களில் அரசியலமைப்பு சட்டமே மேலானது; இந்த அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளுக்கு எதிரான சட்டங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டியதே உச்ச நீதிமன்றம் உள்ளடக்கிய நீதித்துறையின் முதன்மை பணியாகும். ஆனால் இன்றைய நிலையில் உலகமயம்; தனியார்மயம்; தாராளமயம் என்ற அடிப்படையில் இயங்கும் அரசு அமைப்புகள் உலக வர்த்தக கழக நிபந்தனைகளின்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளுக்கு நேரெதிரான பல சட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

புதிய பொருளாதாரக்கொள்கை இந்தியர்களின் வாழ்வை மருத்துவத் துறையில் மட்டுமல்ல, விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தலைகீழாக மாற்றி வருகிறது. மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம், உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் வினியோகம் உள்ளிட்ட அனைத்தும் தனியார்மயமாக்கப்படுகிறது. மதுபான விற்பனை, மணல் விற்பனை போன்ற தேவையற்ற துறைகளில் அரசு ஈடுபடுகிறது. தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் செயலற்றுப்போகும் வகையில் நடைமுறைகள் மாற்றியமைக்கப்படுகின்றன. அனைத்துத் துறை பணியாளர்களும் எந்தவிதமான சமூக பாதுகாப்புமின்றி நிராதரவான நிலையில் உள்ளனர். இந்த நிலை காரணமாக முதியவர்கள் மற்றும் நோயாளிகள் வீட்டில் இருந்து விரட்டப்படும் நிலை உருவாகி வருகிறது.

கல்வி தனியார் மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிக விலை கொடுத்தே உயர்கல்வி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எதைச் செய்தாவது பொருள் ஈட்டுவதே பிழைக்கும் வழி என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்பவன் சாமர்த்தியசாலி என்ற கருத்தாக்கம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. பெரிய தவறுகளை செய்பவர்கள், அரசியல் தலைவர்களாகவும், சிறிய தவறுகளை செய்பவர்கள் குற்றவாளிகளாகவும் மாறும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக சமூகத்தில் யாருக்குமே எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத நிலை நிலவுகிறது.

இதெல்லாம் இப்போதுதான் தெரியுமா? அப்போதே எச்சரித்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அப்போதும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன. உலக வர்த்தக கழகத்தின் முன்னோடியான காட் (General Agreement on Trade and Tariff) ஒப்பந்தத்தை வரைந்த டங்கல் என்பவரின் பரிந்துரைகளை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஏ.தேசாய், சின்னப்ப ரெட்டி, வி.ஆர். கிருஷ்ணய்யர், தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார் ஆகியோர் பரிசீலித்தனர். பின்னர் அவர்கள் அளித்த அறிக்கை மிக முக்கியமானது. “சந்தைக்கு இணக்கமான பொருளாதாரம், தாராளமயமாக்கல், உலகப் பொருளாதாரத்துடன் இணைத்தல், பெருமளவு அன்னிய முதலீட்டுடன் கூடிய தனியார் மயமாக்கல் முதலியன இந்திய தொழில்களின் வளர்ச்சி, இந்திய அரசியல் சட்ட விதிகள் 14, 19, 21-ன் கீழான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை ஆகும்.”

“இந்திய அரசியல் சட்டம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கிறது. மாநிலங்களுக்கென சில அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டவிதி 13, 14-ன் கீழ் மத்திய அரசுக்குக் கிடைக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இந்த கூட்டாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் எதுவும் இல்லை” என்று அந்த அறிக்கையில் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விமரிசனம் விழ வேண்டியவர்களின் காதுகளில் இன்று வரை விழவில்லை. எனவே மக்கள் எக்கேடு கெட்டாலென்ன? என்ற போக்கிலேயே அனைத்து அரசு அமைப்புகளும் இயங்குகின்றன. மாநில சுயாட்சி குறித்து உரத்து முழங்கிய கட்சித் தலைவர்கள்கூட பில்கேட்ஸூக்கும், அவரது உள்நாட்டு எடுபிடிகளுக்கும் காவடி தூக்கும் அவலநிலை நிலவுகிறது.

இதற்குத்தானா இந்தியா சுதந்திரம் பெற்றது? அப்படியானால் “இந்திய அரசியல் அமைப்பு சட்டம்” உண்மையிலேயே ஒரு மோசடிதானா? இந்த கேள்விகளுக்கான பதில் அரசியல்வாதிகளிடமும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களிடமும், சட்டத்துறை சார்ந்தவர்களிடம் மட்டுமே இல்லை. இந்தியாவில் உருவாகும் அனைத்து சட்டங்களும், பொது மக்களாகிய நாம் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம்தான் நிறைவேற்றப்படுகிறது. எனவே நல்ல சட்டங்களோ, கெட்ட சட்டங்களோ - அவை உருவாவதில் நமது பங்கும் இருக்கிறது.

என்ன செய்யப்போகிறோம்?

(நன்றி: மக்கள் சட்டம்)

வரதட்சணை வழக்குகளும், தண்டனையில்லாக் குற்றங்களும்

• ஒரு பெண்ணின் கற்புக்குக் களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தில் செயல்படுவது, சொற்களைப் பயன்படுத்துவது, சைகையை காட்டுவது, குற்றமாகும்.

• வழக்கைத் தாக்கல் செய்யும் ஒவ்வொரு தரப்பினரும், நேரில் அல்லது வழக்கறிஞர் மூலம் தங்களது தரப்பு வாதத்தை எடுத்துவைக்க நீதிமன்றங்கள் அனுமதி தருகின்றன. வழக்கு விசாரணை பகிரங்கமாக நடத்தப்படுகிறது. கற்பழிப்பு போன்ற சில வழக்குகளில் ரகசிய விசாரணை நடத்தப்படுகிறது.

• இரண்டு திருமணம், விபச்சாரம், கணவன் மனைவிக்கு அல்லது மனைவி கணவனுக்கு துரோகம் செய்வது, இது போன்ற வழக்குகளைக் குற்றவியல் நீதிமன்றங்கள் விசாரிக்கின்றன.

கீழ்கண்ட சம்பவங்களில் தற்காப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளால் மரணம் நிகழ்ந்தாலும், அத்தகைய தற்காப்பு நடவடிக்கையில் இறங்கியவர் மன்னிக்கப்படுகிறார்:-

• கடுமையான காயம் அல்லது மரணம் ஏற்படும் வகையில் தாக்குதல் நடக்கும்போது;

• கற்பழிப்பு அல்லது இயற்கைக்கு விரோதமான காம உணர்வை தனித்துக் கொள்ள ஒருவர் நடவடிக்கையில் இறங்கும்போது;

• அரசு அதிகாரிகளை அணுகி தனது விடுதலைக்காக முறையிட முடியாத அளவிற்கு ஒருவரைச் சட்டவிரோதமாக அடைத்து வைக்கும் நேரத்தில்;

• 7 வயதிற்குக் குறைந்த குழந்தைகளது நடவடிக்கை குற்றமாகாது. சட்டத்தின் விளைவுகள், குற்றத்தின் தன்மைகளை உணரும் பருவம் அடையும் முன்னர், 12 வயது வரையுள்ள குழந்தைகளது நடவடிக்கையும் குற்றமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஏனெனில், அந்தக் குழந்தை தனது நடவடிக்கையின் முழு விளைவுகளையும் உய்த்துணரும் பக்குவத்தைப் பெறவில்லை. ஒரு குற்றம் நடக்கும்போது, அந்தக் குற்றத்தைச் செய்தவர் மனநோயாளியாக இருந்தால், அவர் மன்னிக்கப்படுகிறார். அதே நேரத்தில் மனநோயாளியைத் தாக்கிச் சமாளிக்க சட்டபடி உரிமையுண்டு.

(நன்றி: வழக்கறிஞர் முனைவர் சோ.சேசாலம் எழுதிய ‘பெண்ணுரிமைச் சட்டங்கள்’)http://rmlcollegestudentbangalouruniversity.blogspot.com/http://rmlcollegestudentbangalouruniversity.blogspot.com/

பெண்களுக்கான சட்டத்தில் பல முரண்பாடான பிரிவுகள்


வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான சட்டம் ஒரு வழியாகக் கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆனால அதில் பல முரண்பாடான பிரிவுகள் உள்ளன. அவை விவாதத்துக்குரியவை...
யாரும் அதைப் பற்றிப் பேச முன்வருவதில்லை. பெண்களே கூட அதைப் பற்றி விவாதிக்கக் கூச்சப்பட்டுக்கொண்டு விலகிக் கொள்கின்றனர். வேலை செய்யும் இடங்களில் உண்மையிலேயே பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனரா? இது பற்றிக் கேள்வி கேட்கும்போது பல பெண்கள் தெளிவில்லாத பதிலையே அளிக்கின்றனர். சிலர் கூடுதலாகப் பேச முன்வருகின்றனர். வேறு சிலர் இது ஒரு பிரச்சனையே இல்லை, வேலை செய்யும் இடங்களில் வரும் “தீங்கற்ற பாலியல் தொல்லைகளைச்” சமாளிப்பதற்கு பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு தான் தேவை என்று தெரிவிக்கின்றனர்.
      ஆனால், பெண்கள் தங்கள் உரிமைகள் பற்றி மேலும் மேலும் விழிப்புணர்வு பெற்றுவருவதால் அவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இவ்வாறாக அண்மையில் மும்பையில் பாலியல் துன்புறுத்தல் பற்றி பெண்காவலர்கள் பேசியிருக்கிறார்கள், ஆசிரியைகள் பேசியிருக்கிறார்கள். வேறு பணிகளில் பணியாற்றும் பெண்களும் கூட அப்படிப்பட்ட துன்புறுத்தல் நிலவுவதாகத் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும், இந்தப் பிரச்னையை வெளியே தெரிவிப்பதற்குத் தயங்குவதற்குக் காரணம் துன்புறுத்துவோருக்கும் அவர்களுக்கும் இடையில் பதவி நிலையில் இருக்கும் ஏற்றத்தாழ்வே ஆகும். முறையீடு செய்தால் வேலைக்கு ஆபத்து என்னும் நிலை இருக்கும்போது பெண்கள் வேலையைக் காப்பாற்றிக் கொண்டு  அமைதியாக இருந்து விடுவதையே தேர்ந்தெடுக்கின்றனர். எவ்வாறாயினும், அவர்கள் முறையீடு செய்ய விரும்பினாலும் கூட, பெண்கள் தங்கள் குறைகளை எழுத்துப்பூர்வமாக தருவதற்கு முழு நம்பிக்கைக்குரிய, பக்கச்சார்பு இல்லாமல் விசாரிக்கக் கூடிய அமைப்பு முறைகள் பெரும்பாலான நிறுவனங்களில் இருப்பதில்லை.
பயன்தராத வழிகாட்டுதல்கள்
1997ல் விசாகா எதிர் இராஜஸ்தான் அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றே இதுவரை இந்தப் பொருளில் முன்னுதாரணமாகச் செயல்படக்கூடியதாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. சட்டம் இல்லாதபோது, வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளைத் தடுப்பதற்குரிய வழிகாட்டு நெறிகளை நீதிமன்றம்  வகுத்தது. இது போன்ற முறையீடுகளை ஆய்வு செய்வதற்கு உள் விசாரணைக் குழுக்களை அமைக்குமாறு வேலையளிப்போரைக் கேட்டுக் கொள்வதும் இவ்வழிகாடுதல்களில்  அடங்கும். ஆனால இது முறையாகச் செயல்படும் நிறுவனங்களில் வேலைசெய்யும் பெண்களுக்கு மட்டுமே உதவும்.
முறைசாரா நிறுவனங்களில் வேலை செய்யும் பல லட்சக்கணக்கான பெண்களின் நிலை என்ன? மேலும் இவை வழிகாட்டுதல்கள் மட்டுமே சட்டம் அல்ல என்பதால் இவை வழக்கமாகவே புறக்கணிக்கப்பட்டன அல்லது தீவிரமாகக் கடைபிடிக்கப் படவில்லை. இவ்விதமாக, குழுக்கள் அமைக்கப்பட்ட நிறுவனங்களில் அவை  இயங்குவதில்லை அல்லது அவை இருப்பதே பெண்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்படுவதில்லை.
         வேலை செய்யும் இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுவதைத் தடுப்பதற்கு சட்டம் கொண்டுவரவேண்டும் அப்போது தான் அச்சட்ட விதிகளை மீறுவோருக்குத் தண்டனை வழங்க முடியும் என்று பெண்கள் அமைப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன. இறுதியாக, அத்தகைய ஒரு சட்டம் வந்துள்ளது. வேலை செய்யும் இடங்களில் பாலியல் துன்புறுத்தலிலிருந்து  பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் முன்வரைவு டிசம்பர் 7 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான இணை அமைச்சர் கிருஷ்ணா திராத் அதைத் தாக்கல் செய்தார்.
      துரதிர்ஷ்டவசமாக, பாராளுமன்றத்தில் எந்தப் பணியுமே நடைபெறாத ஒரு அமர்வில் இது நடந்துள்ளது. 2ஜி ஊழல் காரணமாக பல நாட்களாக, வாரங்களாக பாராளுமன்றம் முடங்கிக் கிடந்தது. அதன் விளைவாக இது போன்ற ஒரு சட்டம் தொங்கு நிலையில் விடப்பட்டது. அது விவாதிக்கப்படுமா அல்லது விவாதம் இல்லாமலே நிறைவேற்றப்படுமா அலலது நிலுவையிலேயே இருந்துவிடுமா, பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிக்குத் திரும்புவார்களா என்பது யாருக்கும் தெரியாது.
                                   
இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தபட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை  என்றாலும் கூட, அது சட்டமாக்கப்படுவதற்கு முன்னதாக விளக்கமாக விவாதிக்கப்பட வேண்டியிருக்கிறது. நோக்கங்கள் மற்றும் காரணங்கள் பற்றிய அறிக்கையில் அந்த சட்ட முன்வரைவு பின்வருமாறு தெரிவிக்கிறது “வேலை செய்யும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் என்பது பெண்களின் சமத்துவம், உயிர்வாழும் உரிமை, சுதந்திரம் ஆகியவற்றை மீறுவதாகக் கருதப்படுகிறது. அது வேலைச் சூழலில் பாதுகாப்பின்மையையும் பகைமையையும் உருவாக்குகிறது. அது வேலையில் பங்கேற்பதில் பெண்களின் ஊக்கத்தை குன்றச்செய்து அதன்மூலம் அவர்களுடைய சமூகப் பொருளாதார அதிகாரம் பெறுதலையும், உள்ளடங்கிய வளர்ச்சிக் குறிக்கோளையும் எதிர்மறையாகப் பாதிக்கிறது.”
       
  அச்சட்டம் வேலையளிக்கும் முதலாளி ஒவ்வொருவரும் தமது நிறுவனத்தில் முறையீடுகளை ஆய்வு செய்வதற்கு ஒரு உட்குழு நிறுவ வேண்டும் என்று கூறுகிறது. மேலும் அமைப்பு சாரா துறைகளில் வேலை செய்யும் பெண்களின் முறையீடுகளை விசாரிப்பதற்கான மாவட்ட மட்டத்திலான உள்ளூர் குழுக்களை நிறுவுவதையும் கட்டாயமாக்குகிறது. பின்னது குறிப்பாக மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் பெரும்பான்மையான பெண்கள் அமைப்புசாரா துறைகளில் தான் வேலை செய்கின்றனர். முறையான நிறுவனங்களுக்கு மட்டுமே என்று இச்சட்டம் வரையறுக்கப்படுமானால் இவர்கள் இச்சட்டத்தின் எல்லைக்கு வெளியே இருப்பார்கள்.      
    முறையீடு செய்யும் பெண்ணுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் துன்புறுத்துவோருக்குத் தண்டனை வழங்குவதற்கும் இச்சட்டம் விதிமுறைகளை வகுத்துள்ளது. பாலியல் வன்புணர்ச்சி வழக்குகளில் போலவே இச்சட்டத்தின் கீழும் முறையிடும் பெண்கள் அல்லது சாட்சிகள் பெயர்கள் மற்றும் முகவரிகளை வெளியிடுவதற்கு ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.                               
          இருப்பினும் இச்சட்டம் பல முக்கியமான நடவடிக்கைகளில் குறைபாடுகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்கள்  இச்சட்டத்தின் எல்லைக்குள் சேர்க்கப்படவில்லை. நமது பெருநகரங்களில் பல லட்சக்கணக்கான பெண்கள் வீட்டு வேலை செய்து பிழைத்து வருகின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இச்சட்டத்தின் எல்லைக்குள் சேர்க்கப்படாதது வியப்பாக இருக்கிறது. ஒரு திரைப்பட நடிகரால் வீட்டு வேலை செய்யும் பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டது குறித்த வழக்கு இன்னும் மும்பை நீதிமன்றங்களில் விசாரிக்கப் பட்டு வருகிறது. இது போன்ற பல வழக்குகள் முறையீடு செய்யும் கட்டதிற்கே வந்து சேர்வதில்லை. அப்பெண்கள் தாங்கள் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்வதே பெரும்பாலும் நடக்கிறது.
மும்பையில் வீட்டுவேலை செய்யும் ஒரு சில பெண்களிடம் நான் விளக்கமாக விவாதித்து அவர்கள் தமது சொந்த தற்காப்பு முறையை அமைத்துக் கொண்டுள்ளதை அறிந்தேன். ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் வீட்டு வேலை செய்யும் பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்டது தெரிய வரும்போது அவர்கள் அதை முடிந்தவரை அனைத்துப் பெண்களுக்கும், குறிப்பாக இளம்பெண்களுக்குத் தெரிவித்து அந்த வீட்டுக்கு வேலைக்குச் செல்லாதவாறு தடுக்கின்றனர். எனவே, வேலை செய்யும் இடங்களில்  பிற பெண்களை விடக் கூடுதலாகப் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள வீட்டுவேலை செய்யும் பெண்களை அரசாங்கம்  ஏன் இச்சட்டத்தில் சேர்த்துகொள்ளவில்லை என்பதற்கு விளக்கமளிக்கப் படவில்லை.
விவாதத்துக்குரிய பிரிவுகள் 
ஒரு முறையீட்டைப் பதிவு செய்த பெண் தான் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டதை மெய்ப்பிக்க முடியாதபோது அவள் தண்டிக்கப் படவேண்டும் என்று கூறும் இச்சட்டப் பிரிவு மர்மமானதாக இருக்கிறது. சில பெண்கள் இச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது என்றாலும் ஒரு நிறுவனத்தின் உட்குழு ஒரு பெண்ணின் முறையீட்டில் நம்பிக்கையில்லை என்று கூறும் ஒரு சொல்லே அவரைத் தண்டிப்பதற்குப் போதுமானதாக இருக்கமுடியுமா? பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படும் ஒரு பெண் அதை நீதிமன்றத்தில் மெய்ப்பிக்கமுடியாமல் போனால் அதற்காக அவர் தண்டிக்கப்படுவதில்லை. பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் பெரும்பாலும் நீதிமன்றங்களில் தோற்றுவிடுகின்றன. ஏனென்றால் அரசுத் தரப்பால் அந்த வழக்கை போதுமான அளவுக்கு வலுவாக நடத்த முடிவதில்லை அல்லது நடத்துவதில்லை.                       
பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் தமது வழக்கை மெய்ப்பிக்க பெண்கள் மிகக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. பாலியல் வன்புணர்ச்சியில் உடல் ரீதியான சான்று இருக்கிறது. சொற்களையும் சேட்டைகளையும் கொண்ட  தொல்லையை எதைக் கொண்டு மெய்ப்பிப்பது? சம்பந்தப்பட்ட ஆணும பெண்ணுமே உண்மையை அறிவர். யாருடைய சொல் ஏற்றுக் கொள்ளப்படும்? இத்தகைய வழக்குகள் பலவற்றிலும் போல, அதிகாரச் சமநிலை எப்போதும் பெண்களுக்கே மிகவும் எதிராக இருக்கிறது. பாலியல் துன்புறுத்தலை மெய்ப்பிப்பது இன்னும் கடினமானதாக ஆகிவிடுகிறது. இந்தப் பின்னணியில், தண்டனைப் பிரிவு இருக்குமானால் தாம் தண்டிக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலை மெய்ப்பிக்கும் முயற்சியிலிருந்தே விலகி ஒடிவிடுவர்.
          பாராளுமன்றத்தின் கடந்த அமர்வில் விவாதிக்கப்பட்டிருக்க  வேண்டியவற்றில் இவை சில முக்கியமான கேள்விகளாகும். இந்தச் சட்ட முன்வரைவு பாராளுமன்றத்தில் இறுதியாக விவாதத்திற்கு வரும்போது நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இருப்பினும், இவ்விசயங்களில் நமது பாராளுமன்ற வரலாற்றைப் பார்க்கும்போது, அவர்களில் மிகப் பலர் ஒரு சிறிய அளவுக்கேனும் இச்சட்ட முன்வரைவு  குறித்து  ஏதாவது தீவிர அக்கறை செலுத்துவார்கள் என்பது ஐயத்திற்கு இடமானதே. இச்சட்டத்தின் உருவாக்கத்தில் பலப்பல பெண்கள் அமைப்புக்கள் பெருமுயற்சி எடுத்தபிறகு அச்சட்டம் இப்போதைய வடிவிலேயே நிறைவேற்றப்ப்படுமானால் அது துரதிர்ஷ்டமானதாகவே இருக்கும்.

Tuesday, 13 September 2011

போலிநிறுவனங்களை அடையாளம் கண்டுகொள்வது எப்படி..?


போலிநிறுவனங்களை அடையாளம் கண்டுகொள்வது எப்படி..?
சில நிறுவனங்கள் தவணை முறையில் பணம் செலுத்தச் சொல்லி அதற்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் மற்றும் நிலம் கொடுப் பதாகவும் கூறுவது உண்டு. இன்ஷூரன்ஸ் கவரேஜ் கொடுக்க வேண்டுமெனில், அந்த நிறுவனம் ஐ.ஆர்.டி.ஏ. அனுமதியுடன் மட்டுமே செய்ய முடியும். நிலம் கொடுக்கிறோம் என சொல்லிவிட்டு கண்ணுக்குத் தெரியாத ஊர்களில் இருக்கும் பாலைவனத்தில் இடம் ஒதுக்கியிருப்பார்கள்.





அதுதான்; ஆனா அது இல்லை..!
பிராண்டட் பொருட்கள் என்றால் தரமாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த நம்பிக்கையை உருவாக்க முன்னணி நிறுவனங்கள் கோடி கோடியாகச் செலவு செய்கின்றன. ஆனால், நயா பைசா செலவு செய்யாமல் அப்படியே காப்பி அடித்து, கல்லா கட்டும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை. கொஞ்சம் அசந்தாலும் நம் கண்ணை ஏமாற்றிவிடும் போலி பிராண்டுகளைக் கண்டுபிடிக்க சில வழிகள்…